திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் வட்டார மருத்துவமனைக்கு உட்பட்ட வாணாபுரம், காம்பட்டு, தானிப்பாடி, தா-வேலூர், சாத்தனூர், சாத்தனூர் அணை ஆகிய 6 இடங்களில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவின்பேரில் பொதுமக்களின் நலன்கருதி வட்டார மருத்துவ அலுவலர் மரு.செலின்மேரி தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பங்கேற்று தொற்று பரிசோதனை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்றுப்பகுதியை சேர்ந்த 428 நபர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களை பரிசோதனை செய்து தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.