சம்பந்தர் திருப்புன்கூர் தலத்திற்கு யாத்திரையாக வந்ததை கூறும் உரை
மகரமொடு உறு குழை ஓலை காட்டியு
மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும்
வரவர வர இதழூறல் ஊட்டியும் வலைவீசும்
இகலிய பிரம கபால பாத்திரம்
எழில் பட இடு திருநீறு சேர்த்திறம்
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக
எழில் பட மழுவுடன் மானும் ஏற்றதும்
இசைபட இசைதரு ஆதி தோற்றமும்
இவை இவை என உபதேசம் ஏற்றுவது ஒருநாளே
ஜகதலம் அதில் அருள் ஞான வாட்கொடு
தலைபறி அமணர் சமூகம் மாற்றிய
தவமுனி ஜகமுளர் பாடு பாட்டென மறைபாடி
தரிகிட தரிகிட தாகுடாத் திரி
கிடதரி கிடதரி தா எனாச் சில
சபதமொடு எழுவன தாள வாச்சியம் உடனே நீள்
அகுகுகு குகுவென ஆளி வாய்ப் பல
அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும்
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே
அரி துயில் சயன வியாள மூர்த்தனு
மணிதிகழ் மிகு புலியூர் வியாக்ரனும்
அரிதென முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே.