நாளொரு திருக்குறள் :
---------------------
இன்று (1.8.2024)
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம் : 43.அறிவுடைமை
குறள் எண்: 428
-------------.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
பொருள்:
--------
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பது அறிவின்மை ஆகும் . அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி நடப்பது அறிவுடையோரின் செயலாக இருக்கும்.
வாழ்க வள்ளுவம்!
வளர்க தமிழ்!
நல்வணக்கங்களுடன்:
பா.மூவேந்திரபாண்டியன்.