साधारणेषु युवयो: मणिपादरक्षे देवस्य दानवरिपो: त्रिषु विक्रमेषु
अद्यापि शिञ्जितं इषाद् अनुवर्तमानं न्यूनाधिकत्व विषयं कलहं प्रतीमः 428
சாதாரணேஷு யுவயோ: மணிபாதரக்ஷே
தேவஸ்ய தானவ ரிபோ: த்ரிஷு விக்ரமேஷு
அத்யாபி ஸின்ஜிதம் இஷாத் அனுவர்த்தமானம்
ந்யூநாதிகத்வ விஷயம் கலஹம் ப்ரதீம :
ஸ்வாமி தேசிகன் பாதுகைகளிலிருந்து எழுகின்ற நாதம் த்ரிவிக்ரமனாக பெருமான் பூமியை ஆகாசத்தை அளந்த அன்று இரண்டு பாதுகைகளுக்குள் நடந்த வாக்குவாதத்தின் தொடர்ச்சியோ என்று வியக்கிறார். திரிவிக்ரமன் மூன்று அடிகள் வைத்தான். முதலில் வலது திருவடியால் பூமியையும், பிறகு இடது திருவடியால் வானத்தையும் அளந்து மீண்டும் வலது திருவடியை மகாபலியின் சிரத்தில் வைத்து அவதார குறிக்கோளை எட்டினான். வலது திருவடி இரண்டு முறை பயன்படுத்தப்பட இடது திருவடி ஒரு முறைதான் பயன்படுத்தப் பட்டது. இதனால் வருத்தமடைந்த இடது திருவடி வலது திருவடியோடு ஒரு வாதத்தில் ஈடுபட்டது. இது இப்போதும் தொடர நாம் அதை பாதுகைகளின் மணிகள் ஒலிக்கும் நாதமாக கேட்கிறோம் என்கிறார் ஸ்வாமி தேசிகன்.